நண்பருடன் சுற்றுலா சென்ற இளைஞர் மாயம்..!

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகன் பிரவீன் குமார் ( வயது 22) இவர் டி.என்.பி.எஸ்.சி பரிட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி தனது நண்பர் ஹரிஷ் என்பவருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பி வரவில்லை. இது குறித்து தந்தை செல்வராஜ் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..