லாரி மோதி கணவருடன் ஸ்கூட்டரில் சென்ற பெண் பரிதாப பலி..

கோவை அருகே உள்ள இருகூர், சத்ய நாராயணபுரம். இ. பி. ஆபிஸ் ரோட்டை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் ( வயது 61) இவரது மனைவி சாந்தி ( வயது 52 )இவர்கள் இருவரும் நேற்று அங்குள்ள பைபாஸ் ரோட்டில் இருகூர் ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த ஈச்சர் லாரி இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக இ எஸ். ஐ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். வழியில் மனைவி சாந்தி பரிதாபமாக இறந்தார்.கணவர் முத்துமாணிக்கம் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் கேரள மாநிலம் பாலக்காடு வாவனூரை சேர்ந்த லாரி டிரைவர் அஷ்ரப் ( வயது 50) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.