லாட்டரி டிக்கெட் விற்ற மூதாட்டி கைது..!

கோவை செல்வபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் தங்கவேல், அவரது மனைவி மகேஸ்வரி (வயது 61) இவர் நேற்று தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள கழிப்பிடம் அருகே நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக ரோந்து ‘ சுற்றி வந்த கடைவீதி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், மகேஸ்வரியை கைது செய்தார் .இவரிடமிருந்து தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்களும், 2 செல்போன், பணம் ரூ. 2500 பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..