கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்றும் போது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி..

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் ,கருப்பசாமி வீதியை சேர்ந்தவர் வேலுசாமி அவரது மனைவி ஜோதிமணி ( வயது 60)இவரது மகன் சரவணன் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.வீட்டின் முதல் மாடியில் நின்று ஜோதிமணி கட்டிடத்துக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்திலிருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். வழியில் ஜோதிமணி பரிதாபமாக இறந்தார் .இது குறித்து அவரது மகன் சரவணன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.