மொபட் மீது கார் மோதி விபத்து – வியாபாரி பரிதாப பலி..

கோவையை அடுத்த கோவில் பாளையம் பக்கம் உள்ள விளாங்குறிச்சி, உமா மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் சின்ன கண்ணன் (வயது55) பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று காளபட்டி – விளாங்குறிச்சி ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது மொபட் மீது மோதியது. இதில் சின்ன கண்ணன் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து அவரது மகன் கோயில் பாளையம் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.இது தொடர்பாக கார் ஓட்டி வந்த ராமநாதன் (வயது 70 ) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.