மளிகை கடையில் குட்கா பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது..!

கோவை ரத்தினபுரி போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ரமேஷ் நேற்று மாலை ரத்தினபுரி லட்சுமி அம்மாள் வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 2 கிலோ 800 கிராம் எடை கொண்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளரான ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்த தங்கவேலு (வயது 65) கைது செய்யப்பட்டார் .குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.