ஆஸ்திரேலியா படிக்க சென்று கோவை திரும்பிய வாலிபர் தற்கொலை..!

கோவை விமான நிலையம் துரைசாமிநகரை சேர்ந்தவர் முருகேஷன் (வயது 58). விவசாயி. இவரது மகன் குனாசுந்தர் (28). இவர் கடந்த 2016-ம் ஆண்டு படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றார்.

பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கோவை திரும்பினார். கோவை வந்த அவர் கடந்த சில மாதங்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் ஓய்வு எடுக்க கோவில்பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார். அங்கு 1 வாரமாக தங்கி இருந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கருமத்தம்பட்டி வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (28). அவர்
அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். அப்போது அவரது தாயார், கார்த்திக் கண்டித்து அறிவுரை கூறினார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.