சூலூரில் தொழிலாளி அடித்துக் கொலை – கேரளாவை சேர்ந்த இருவர் கைது.!!

திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்தவர் ராஜா ( வயது 42) சமையல் தொழிலாளி. இவர் கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கலங்கல், காவேரி நகரில் உள்ள தனியார் சமையல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .இங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ், விஜூ ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் திடீர் தகராறு ஏற்பட்டது. அப்போது ரமேஷ் விஜூ ஆகியோர் வாங்கி வைத்திருந்த உணவுப் பொருட்களை ராஜா தூக்கி வீசி எரிந்து விட்டார்.. இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், விஜூ ஆகியோர் சேர்ந்து அங்கிருந்த நாற்காலியை எடுத்து ராஜாவை சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை வீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாவை கொலை செய்த ரமேஷ்,விஜூ ஆகியோரை நேற்று மாலை கைது செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.