ரயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாப பலி..

கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 26) இவர் குப்பே பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது கஸ்தூரிபாளையம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் சிக்கி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.