பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் பலி..

கோவை கணபதி பி. என் .டி காலனியில் உள்ள சின்னசாமி நகர், 2-வது வீதியை சேர்ந்தவர் ராஜா ( வயது 37) பாம்பு பிடி வீரர்.இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் கணபதி கட்டபொம்மன் வீதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் புகுந்த பாம்பை பிடிக்க சென்றார். அந்த நேரம் அவரது வலது கையில் பாம்பு கடித்தது. அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 நாட்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.இந்த நிலையில அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தினமும் போய் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு.சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.