திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது..!

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு கடந்த 14 ஆம் தேதி கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது . வருகிற மார்ச் மாதம் திருமணம் நடக்க உள்ளது .இந்த நிலையில் அந்த பெண்ணின் உறவுக்கார வாலிபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு அடிக்கடி செல்போனில் குறுந்தகவல் அனுப்பி நீ அந்த வாலிபர் திருமணம் செய்யக்கூடாது. நான்தான் உன்னை திருமணம் செய்வேன் என தொல்லை கொடுத்து வந்துள்ளார் . அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபரின் வீட்டுக்கு சென்று நீ அந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என மிரட்டி உள்ளார்.. இதுகுறித்து அந்தப் பெண் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.