சூலூரில் பைக் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி..

கோவை சூலூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள( வயது 58) தனியார் நிறுவனத்தில் ஊழியராக. வேலை செய்து வருகிறார் .இவர் நேற்று சூலூர் -கண்ணம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ரங்கநாதபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரியும். பைக்கும் மோதிகொண்டது. இதில் பெருமாள் அதே இடத்தில் பலியானார். இது குறித்து அவரது மனைவி பஞ்சவர்ணம் சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் திருவண்ணாமலை யைசேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.