போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது..!

கோவை சாய்பாபா காலனி அருகே தடாகம் சாலையில் காலி இடம் ஒன்றில் போதைப் பொருள் விற்பதாக காவல் துறைக்கு தகவல் தரப்பட்டன. போதை பொருள் விற்கும் நபரை பிடிப்பதற்காக சாய்பாபா காலனி காவல் துறையினர் சென்றனர். அப்போது அங்கு போதை பொருள் விற்று வந்த ஹரிஹரன் என்ற 19 வயதுடைய வாலிபரை கைது செய்தனர். அப்போது போதை பழக்கத்திற்காக பயன்படுத்தப்படும் டேபண்டடால் 100 எம் ஜி 80 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். வாலிபரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.