சிங்கநல்லூர் ரோட்டில் தனியார் பஸ் கண்டக்டர்- டிரைவர்கள் மோதல்- 4 பேர் மீது வழக்குபதிவு ..!

கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட சந்திப்பில் நேற்று தனியார் பஸ் டிரைவர்கள் – கண்டக்டர்கள் தகராறு செய்து கொண்டனர். “டைமிங்” தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .இது குறித்து சிங்காநல்லூர்  போலீசுக்கு தகவல் தெரிவிக்கபட்டது.சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு கோஷ்டியை சேர்ந்த கண்டக்டர் நவீன் (வயது 27) டிரைவர் முஹம்மத் கரபதுல்லா (வயது 24) மற்றொரு கோஷ்டியை சேர்ந்த கண்டக்டர் மூர்த்தி ( வயது 40 )டிரைவர் சரவணபவன் (வயது 57) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தார்.இதையடுத்து போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டது.