திருமணம் நிச்சயமான புது பெண் திடீர் மாயம்..!

கோவை எம்.என்.ஜி வீதி யை சேர்ந்தவர் முருகன் (வயது 53). தங்க பட்டறை தொழிலாளி. இவரது மகள் ஹேமலதா (வயது 20).

இவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதற்காக வரன் பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர். அடுத்த மாதம் 23-ந் தேதி காந்தி பார்க்கில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்து வந்தனர். திருமணத்திற்காக கோவிலில் மணபெண்ணின் புகை படத்தை கொடுக்கும் படி கூறியிருந்தனர். இதையடுத்து சம்பவத்தன்று ஹேமலதா தனக்கு நிச்சயமான வாலிபருடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பினார்.

வீட்டின் முன்பு அந்த வாலிபர் ஹேமலதாவை இறக்கிவிட்டு சென்றார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. வெகு நேரமாகியும் ஹேமலதா வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து முருகன் ஹெரைட்டி ஹால் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுபெண் ஹேமலதாவை தேடி வருகின்றனர்.