பொங்கல் பரிசுடன் விவசாயிகள் பயரிட்ட கரும்பு தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும்.!!

கோவை: பாரதிய ஜனதா கட்சி – விவசாய அணி அளித்த மனுவில் கூறியதாவது
வர இருக்கும் விவசாயிகளின் பண்டிகையான தைப் பொங்கல் அன்று தமிழக மக்களுக்கு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பில் சர்க்கரை மற்றும் பச்சரிசி உடன் ரூ.1000 மட்டும் வழங்கப்பட உள்ளது. இத்துடன் சேர்த்து விவசாயிகள் பயரிட்ட செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து தமிழக மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதனை வழங்குவதன் மூலம் தமிழக விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பற்ற கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.