பல தடவை தற்கொலைக்கு முயன்றவர் 5-வது முறை தூக்கு போட்டு தற்கொலை..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கோட்டூர் பக்கம் உள்ள தென் சங்கம்பாளையம், கலைஞர் நகரை சேர்ந்தவர் நடராஜ் . இவரது மகன் கருப்புசாமி ( வயது 26) இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் தகராறு காரணமாக கருப்பசாமி 4 தடவை தற்கொலைக்கு முயன்றுள்ளார். 5-வது தடவையாக நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் மனைவியின் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை நடராஜ் கோட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..