பணம் தர மறுத்த லாரி கிளீனருக்கு கத்திக்குத்து – 2 பேர் கைது..!

கோவை அருகே உள்ள வெள்ளலூர் அவுசிங் யூனிட்டில் வசிப்பவர் தியாகராஜன். இவரது மகன் கோகுல கிருஷ்ணன் ( வயது 23) லாரி கிளீனர் இவர் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த 2பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டனர் .கொடுக்க மறுத்தார் இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து அவரது வயிற்றில் கத்தியால் குத்தினார்கள். இதில் படுகாயம் அடைந்த கோகுலகிருஷ்ணன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளலூர், அவுசிங் யூனிட்டை சேர்ந்த சர்புதீன் ( வயது 25 )கிஷோர் (வயது 25 )ஆகியோரை நேற்று மாலை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை மிரட்டல் தாக்குதல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..