அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து..

ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் ஒரு தம்பதியினர் ஐந்து மாத கைக்குழந்தை மற்றும் ஐந்து வயது பெண் குழந்தையுடன் மணியக்காரன் பாளையத்திலிருந்து கணபதி சென்று கொண்டிருந்தனர் அப்போது கணபதியில் இருந்து மணியகாரம்பாளையம் வழியாக வந்த மாருதி 800 கார் அதிவேகமாக வந்து இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இதனை அங்கு நின்றவர்கள் அந்த தம்பதியினரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நிற்காமல் சென்ற மாருதி 800 காரை சரவணம்பட்டி போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.