கோத்தகிரியில் மினி லாரியை அடித்து நொறுக்கிய காட்டு யானை கூட்டம்..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டம் பகுதியை சுற்றி
ஏராளமான கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்கள் அனைத்தும் வனத்தையொட்டி இருக்கிறது. இதனால் இந்த
பகுதிகளில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து விடுவதை வாடிக்கையாக
வைத்துள்ளது. குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கிரா
மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

சோலூர் மட்டம் அருகே உள்ள முடியூர், வக்கனாமரம் கிராமத்திற்குள் நேற்று 5
காட்டு யானைகள் கூட்டம், நுழைந்தது. வெகுநேரமாக குடியிருப்பு
பகுதிக்குள்ளேயே யானைகள் சுற்றி திரிந்தன. யானை வந்ததை அறிந்த பொதுமக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். வேலை பார்த்து கொண்டு இருந்தவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் சுற்றிய காட்டு யானைகள் திடீரென
குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிலாரியை அடித்து நொறுக்கியது. பின்னர் அங்கிருந்து சென்றன. தொடர்ந்து யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கிராமபுறங்களுக்கு வராதவண்ணம் அகழிகள் வெட்டி தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.