அதிவேகமாக வந்த பைக் மோதி வாடிக்கையாளருக்காக காத்திருந்த கால் டாக்ஸி ஓட்டுநர் படுகாயம்..

கோவை காந்திமா நகர் பகுதியை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் தேவராஜ் நேற்று காலை மலுமிச்சம்பட்டி பகுதியில் வாடிக்கையாளர் காத்திருப்புக்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார் அப்பொழுது அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கால் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் இரு கால் டாக்ஸிகள் மீது அதிவேகமாக மோதினார் இந்த சம்பவத்தில் கால் டாக்ஸி ஓட்டுனர் தேவராஜ் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இந்த சம்பவத்தில் நின்று கொண்டிருந்த இரு கால் டாக்ஸி வாகனங்களும் சேதமடைந்தன இது சம்பந்தமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..