கோவையில் போக்குவரத்துதுறை அமைச்சரை சந்தித்து வால்பாறை நகரச்செயலாளர் கோரிக்கை..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மகளீர்களின் நலன் கருதி கோவை வந்திருந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்த வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் அவருக்கு சால்வை அணிவித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் தமிழக அரசு தமிழகத்தில் மகளி ருக்கான கட்டணமில்லா பேருந்துகளை இயக்கி வரும் நிலையில் வால்பாறை பகுதியிலும் அந்த பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கவும் மேலும் மலைப்பகுதியில் 15 புதிய பேருந்துகள் வழங்க வேண்டும் என்றும் தனது கோரிக்கை மனு மூலம் வலியுறுத்தியுள்ளார். கோரிக்கை மனுவை கனிவுடன் பெற்றுக் கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின் போது நகர துணைச்செயலாளர் சரவணபாண்டியன், ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்..