கிணற்றில் குதித்து மக்களை தேடி மருத்துவத் திட்ட பெண் ஊழியர் தற்கொலை..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணக்கம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் இவரது மனைவி சதீஸ்வரி (வயது 35) இவர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சதீஸ்வரி கணவரையும் 2 மகன்களையும் விட்டுப் பிரிந்து தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சதீஸ்வரி நேற்று அங்குள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தாயார் பார்வதி நெகமம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.