விடுதியில் தங்கி படித்த கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

கோவை : மதுரை ,ஏழுமலை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் .இவரது மகள் இன்பானா பாத்திமா (வயது 19) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அங்குள்ள பெண்கள் விடுதிகள் தங்கி உள்ளார். கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் விடுதிக்கு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.