தெரு நாய்களை கத்தியால் குத்தி நபர் மீது கோவையில் வழக்கு பதிவு!!!

தெரு நாய்களை கத்தியால் குத்தி நபர் மீது கோவையில் வழக்கு பதிவு

கோவை சாய்பாபா காலனி அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் என்பவரின் மகன் சதீஷ் (21). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி கழிப்பறை பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு தெரு நாய்களை கத்தியால் குத்தி காயப்படுத்தினார் .இது பற்றி தகவல் அறிந்த விலங்குகள் நல ஆர்வலர் பாலகிருஷ்ணன் கோவை சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சதீஷ்( 21) என்ற வாலிபர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.