76 வயது விவசாயி தீக்குளித்து தற்கொலை…

கோவை சூலூர் பக்கம் உள்ள செஞ்சேரி புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணிய கவுண்டர் ( வயது 76) விவசாயி .இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதனால் மனம் உடை ந்த சுப்பிரமணிய கவுண்டர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகி அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து அவரது மகன் கோவிந்தராஜ் சுல்தான் பேட்டை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.