10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்ஸோவில் தொழிலாளி கைது..!

கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த முருகன் கூலி தொழிலாளி. திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயதான 5 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி இடம் பாலியல் ரீதியில் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமி இப்படியெல்லாம் செய்யக் கூடாது என அவரிடம் கூறியுள்ளார். ஆனால் முருகன் கேட்காமல் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து வந்தார். இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த மாதம் சிறுமி தனியாக இருந்த போது முருகன் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் சிறுமையிடம் நடந்த விவரங்களை வெளியே சொல்ல கூடாது என கூறியுள்ளார். அதேபோல் தற்பொழுது அவர் இது  போன்ற செயலில் ஈடுபட்டதால் சிக்கிக் கொண்டார்.