பஸ்சில் தூங்கியவரிடம் நைசாக செல்போன் திருடியவரை மடக்கி பிடித்த சக பயணிகள்..!

கோவை துடியலூர் வி.கே .எல். நகரை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 36)இவர் நேற்று டவுன் பஸ்சில் என். ஜி ஜி.ஓ. காலணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் தூங்கிவிட்டார். அந்த நேரத்தில் ஒரு ஆசாமி இவரது சட்டை பையில் இருந்த செல்போனை நைசாக திருடினார்.அப்போது கண் விழித்த ரஞ்சித் குமார் பஸ் பயணிகள் உதவியுடன் அந்த ஆசாமியை மடக்கி பிடித்து துடியலூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர் .விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் வன்னியூரைச் சேர்ந்த பிரபு (வயது 39) என்பது தெரியவந்தது . இவரிடமிருந்து செல்போன் மீட்கப்பட்டது..