பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய வாலிபர் மீட்டு..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியில் பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது.

அலுவலக வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசியது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை. இதனையடுத்து போலீசார் தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.