திடீர் வெள்ளப்பெருக்கு : கோவை குற்றாலத்தில் குளிக்க தடை- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!

கடந்த சில தினங்களாக கோவையில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல், மேற்கு மலை தொடர்ச்சி பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் தொடர் மழை காரணமாக கோவை குற்றாலத்தில் வழக்கத்தைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளது. மேலும் இரு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னெச்சரிக்கை உள்ளதால்
பொது மக்கள் நலன் கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.