கோவை மளிகை கடையின் ஷட்டர் உடைத்து கொள்ளை..!

கோவை சுந்தராபுரம் சிட்கோ, எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன் (வயது 45) இவர் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் மளிகை கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் கடைக்கு சென்று பார்த்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த 3 ஆயில்பெட்டி , 4 ஹார்லிக்ஸ் பாட்டில், 5 கிலோ அரிசி 3 நெய் பாட்டில் ஆகியவற்றை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர் இது குறித்து ராதாகிருஷ்ணன் போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.