நைஜீரியா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 76 பேர் நீரில் மூழ்கி பலி..

புஜா: நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 76 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முகமது புகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நைஜீரியா நாட்டில் ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியதால் நீச்சல் தெரியாத பலர் நீரில் மூழ்கியதில் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு, நிவாரண பணி குழுக்களை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த சம்பவம் குறித்து முகமது புகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்த படகு விபத்து போன்று வருங்காலங்களில் வேறு சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும், ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார். 76 பேர் பலியாகிய சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.