அரசு பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் செயின் அபேஸ்.!!

கோவை பாப்பநாயக்கன்பாளையம் ,பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தனராஜ். இவரது மனைவி மகாலட்சுமி ( வயது 53) இவர் நேற்று பாப்பநாயக்கன்பாளையத்தில் இருந்து பீளமேட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.பஸ்சை விட்டு இறங்கி பார்த்த போது அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் செயினை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடிவிட்டனர். இது குறித்து மகாலட்சுமி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.