சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் ரூ 4.கோடி மதிப்புள்ள 7.50 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்..!!

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு – சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சந்தேகப்படும்படி சிங்கப்பூரிலிருந்து வந்த 4 பேரை பிடித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அவர்களிடமிருந்து 7.50 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 கோடி இருக்கும். அவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.