ஓடும் பஸ்சில் கல்லூரி பெண் ஊழியரிடம் 5 பவுன் நகை திருட்டு..!

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோடு, பிரைம் அவன்யூவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி ஜமுனா (வயது 55) இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கவுண்டம்பாளையத்தில் இருந்து வடகோவையில் உள்ள அந்த கல்லூரிக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். கல்லூரி பஸ் ஸ்டாப் வந்ததும் பஸ்சை விட்டு இறங்கும்போது இவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடிவிட்டனர். இது குறித்து ஜமுனா சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..