கடைக்குச் சென்ற பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் மீது வழக்கு..!

கோவை கரும்புக்கடை ஆஷாத் நகரை சேர்ந்தவர் மன்சூர் அலி ,இவரது மகள் கமருதாஜ் (வயது 21) இவர் நேற்று அங்குள்ள மளிகை கடைக்கு சாமான் வாங்க சென்றார் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜான்சா என்பவர் அவரை கேலி கிண்டல் செய்தாராம். இது தொடர்பாக அந்த பெண் கேட்டபோது ஜான்சா அந்தப் பெண்ணை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினாராம். இதுகுறித்து கரும்புக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஜான்சா மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..