கோவை கிறிஸ்தவ மத போதகரின் காரை திருடிய வழக்கில் 5 பேர் கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளைம் அருகே உள்ள தொப்பம்பட்டி , டேனியல் நகரில் வசிப்பவர்.சுதாகர் கிறிஸ்தவ மத போதகர். இவர் கடந்த 9-ந் தேதி ராக்கி பாளையம் , விநாயகர் நகரில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு ஜெபம் செய்ய காரில் சென்றார். பின்னர் ஜெபத்தை முடித்துவிட்டு வெளியே வந்த போது காருடன் டிரைவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துதேடி வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் போலீசார் நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் வாகன சோதனை செய்தபோது அந்த வழியாக வந்து ஒரு காரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அது மதபோதகர் சுதாகரின் கார் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை பிடித்து விசாரித்தனர் .இதில் அவர்கள் கோவையை சேர்ந்த உமர் ஷெரிப் ( வயது 29) முகமது யூசுப் ( வயது23 )முகமது ஜாகிர் ( வயது26 ) இருகலூரைச் சேர்ந்த சுதாகர் (வயது 29) மேட்டுப்பாளையம் பாட்ஷா (வயது 31) என்பது தெரிய வந்தது. இவரகளை போலீசார் கைது செய்தனர். கார் மீட்கப்பட்டது. இதில் தொடர்புடைய மணி என்பவரை தேடி வருகிறார்கள்.