பாஜக நிறுவப்பட்ட 42 ஆண்டு நிறைவு தினம் : தலைமையகத்தில் கொடியேற்றிய தேசியத் தலைவர் ஜேபி நட்டா.!!

இன்று பாஜக கட்சியின் நிறுவப்பட்டு நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.

அப்பொழுது டெல்லியில் உள்ள தலைமை அலுவலகம் முன்பதாக உள்ள பாஜக கட்சி கொடியை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா  ஏற்றி வைத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு பாஜக எம்பிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கான திட்டம், அரசின் பொருளாதார திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் ஆகியவை குறித்தும் பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரதமர் காணொலி மூலமாகவும் மக்களுடன் உரையாற்றி வருகிறார்கள்.