டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்..

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 4 -வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆலங்குளம் காமராஜர் நகரைச் சேர்ந்த சுரேந்தர் மகன் அஸ்வந்த் வயது (4) இப்பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் யு கே ஜி பயின்று வந்தார். அந்த சிறுவனுக்கு கடந்த பத்து தினங்களுக்கும் மேலாக காய்ச்சல் இருந்து வந்ததாம். பின்பு ஆலங்குளம், பாவூர்சத்திரம் என பல்வேறு தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை பெற்று பரிசோதனை செய்த போது டெங்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுவன் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார் . அங்கு  சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை சிறுவன் பரிதாபமாக பலியானார். அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்துள்ளது.