மசாலா பொடி ஏற்றுமதி தொழில் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.57 லட்சம் மோசடி.!!

கோவை புது சித்தாபுதூர், இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி திலகம் (வயது 52) இவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனது உறவினர்களான ஹரிஹரசுதன்,சாந்த மணி ஆகியோர் தன்னிடம் மசாலா பொடி ஏற்றுமதி செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்கள். இதை நம்பிய திலகம் பல்வேறு தவணைகளில் அவர்களிடம் ரு. 57 லட்சம் கொடுத்தார். ஆனால் அவர்கள் ஏற்றுமதி தொழிலும் தொடங்கவில்லை. அந்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து திலகம் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் மோசடி செய்த ஹரிஹரசுதன், சாந்தாமணி ஆகியோர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.