மருதமலை முருகன் கோவிலில் 38.50 லட்சம் உண்டியல் வசூல்..!

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தோப்பு அணிக்கு மாதந்தோறும் எண்ணப்படும் இந்த மாதம் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் பொது உண்டியல் மூலம் ரூ. 36 லட்சத்து 38 ஆயிரத்து 769 திருப்பணி உண்டியல் மூலம் ரூ 61 ஆயிரத்து 999 , கோசாலை உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 53 என மொத்தம் ரூ 38 லட்சத்து 59 ஆயிரத்து 821 வருமானம் கிடைத்தது. மேலும் 62 கிராம் தங்கம் ஒரு கிலோ 343 கிராம் வெள்ளி, 4 கிலோ 398 கிராம் பித்தளை இருந்தது. காணிக்கை எண்ணும் போது அறங்காவலர்கள் ,கோவில் துணை ஆணையர் மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்..