37 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்… அடுத்தடுத்து அதிரடி ஆக்சனில் இறங்கிய தமிழக அரசு.!!

மிழகத்தில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சில ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக காவல்துறையில் நான்கு பேர் டிஜிபிக்களாக பதவி உயர்வு உட்பட 37 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து 16 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.

தற்போது 37 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஆவடி மாநகர காவல் ஆணையர் அருண் பொதுவிநியோகப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், சென்னை பூக்கடை துணை ஆணையர் ஸ்ரேயா குப்தா தமிழக காவல்துறையின் குற்ற ஆவண காப்பக எஸ்பி ஆக என மொத்தம் 37 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.