கோவையில் ஒரே நாளில் 3 இளம்பெண்கள் எங்கோ மாயம்..!

கோவை ஆர். எஸ். புரம். சர் சண்முகம் ரோட்டை சேர்ந்தவர் ராஜன் .இவரது மகள் சிவஸ்ரீ (வயது 20) மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.நேற்று காலையில் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .இது குறித்து தந்தை ராஜன் ஆர். எஸ். புரம் .போலீசில் புகார் செய்துள்ளார்.

இதேபோல கோவை ராமநாதபுரம், மருதூர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் கவுசல்யா( வயது 19).இவர் செல்போனில் நீண்ட நேரம் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாராம். இதை பெற்றோர்கள் கண்டித்தனர் .இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யா நேற்று காலை வீட்டிலிருந்து எங்கோ சென்று விட்டார் .இது குறித்து தந்தை ராமச்சந்திரன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார்.

கோவை தெலுங்கு பாளையம், உடையார் விதியை சேர்ந்தவர் சேகர் .இவரது மகள் தனுஸ்ரீ ( வயது 19) இவர் டவுன்ஹாலில் உள்ளஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் “இன்ஸ்டாகிராம் ஆப்” மூலம் ஒரு வாலிபரை காதலித்து வந்தாரம். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து அவரது தாயார் ராதா செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.