பெட்டிக் கடையில் குட்கா விற்ற வியாபாரி கைது..!

கோவை ஆர். எஸ் .புரம். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் நேற்று மாலை அங்குள்ள கிழக்கு அருணாச்சலம் ரோடு டி.கே.வீதி சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார். அங்கு தடை செய்யப்பட்ட 9 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இது தொடர்பாக பெட்டிக்கடை நடத்தி வந்த வியாபாரி திலகராஜ் (வயது 61) கைது செய்யப்பட்டார் .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.