கோவையில் ஒரே நாளில் 3 பள்ளி மாணவிகள் திடீர் மாயம்..!

கோவை : ஈரோடு மாவட்டம், பவானி பகுதியை சேர்ந்தவர் முருகன் .இவரது 16 வயது மகள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார் .நேற்று முன்தினம் தனது பாட்டியுடன் கோவையில் உள்ள கண் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அந்த மாணவி திடீரென்று எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல இருகூர் டி .எஸ் கே நகரை சேர்ந்தவர் செல்வமணி .இவரது 16 வயது மகள் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார் .இவரும் அதே ஊரை சேர்ந்த சரத்தாஸ் மகள் பிளஸ் 2 மாணவி இவர்கள் இருவரும் திடீரென்று மாயமாகி விட்டனர். இது குறித்து கோவை கிழக்கு பகுதி பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு செய்து தேடி வருகிறார்கள்..