நீலாங்கரையில் கத்திக்குத்தில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது..!

சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் பகுதியில் வசிப்பவர் தீனா வயது 25 தகப்பனார் பெயர் வேலு என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். தீனா நேற்று காலை கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனி மூன்றாவது மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது 3 ரவுடிகள் வழிமறித்து தகராறு செய்துவிட்டு கத்தியால் குத்தி விட்டு தலைமறைவாகி விட்டனர். காயமடைந்த தீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தீனாவின் மனைவி நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது . ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தீவிர விசாரணை நடத்தி கத்திக்குத்தில் ஈடுபட்ட 1. உமர் என்கிற விஜய் (22) தகப்பனார் பெயர் அப்துல் ஹமீத் அவ்வை நகர் திருவான்மியூர்2. ஆகாஷ்(19) தகப்பனார் பெயர் பிரதீப் குமார் அவ்வை நகர் திருவான்மியூர்3. டேனியல்(19) தகப்பனார் பெயர் செபஸ்டின் வெங்கடேசபுரம் 4 வது மெயின் ரோடு கொட்டிவாக்கம் என 3 ரவுடிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கத்திகள் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கத்திக்குத்தில் ஈடுபட்ட மூன்று பேரும் ஆனந்தன் என்பவர் மீது உள்ள முன்விரோதம் காரணமாக ஆனந்தனின் கூட்டாளி தீனாவை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது .மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட டேனியல் மீது திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் இருப்பதாக தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மூன்று கேடிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்..