தோழியாக நடித்து 8 பவுன் நகை திருட்டு. பெண் கைது…

கோவையை அடுத்தசூலூர் பக்கம் உள்ள குரும்பப்பாளையம், சிவன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன் .இவரது மனைவி வரலட்சுமி ( வயது 42 )அங்கு மெடிக்கல் ஸ்டோர் நடத்திவருகிறார். இவரும் தேனி மாவட்டம் பெரியகுளம், கலைஞர் காலனி சேர்ந்த ரமேஷ் மனைவி ஜான்சி ( வயது 23 )என்பவரும் தோழிகள்.இந்த நிலையில் ஜான்சி குரும்பபாளையத்தில் உள்ள வரலட்சுமி வீட்டுக்குவிருந்துக்கு வந்திருந்தார் .2 நாட்கள் அங்கு தங்கி இருந்தார் .அவர் சென்ற பிறகு வீட்டில் உள்ள பீரோவை பார்த்தபோது அதிலிருந்து 8 பவுன் தங்க நகைகளை காணவில்லை .இது குறித்து வரலட்சுமி சூலூர் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் வழக்கு பதிவு செய்து தோழி ஜான்சியை நேற்று கைது செய்தனர். 8 பவுன் நகை மீட்கப்பட்டது.