கோவை கிளினிக்கில் பூட்டை உடைத்து துணிகர திருட்டு..! 

கோவை அருகே கிளினிக்கில் பூட்டை உடைத்து துணிகர திருட்டு..!  கோவை அருகே உள்ள துடியலூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் முதல் தளத்தில் தனியார் மருத்துவமனை கிளினிக் உள்ளது.இங்கு நேற்று முன்தினம் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து டாக்டர் அறையில் இருந்த பணம் ரூ 5 ஆயிரம் மற்றும் லேப்டாப் .செல்போன் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மருத்துவமனை மேனேஜர் மணிவண்ணன் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.