கோவை டாஸ்மாக் கடை அருகே போதை மாத்திரைகள், போதை பொருள் விற்பனை – பெண் உட்பட 3 பேர் கைது.!!

டாஸ்மாக் கடை அருகே போதை மாத்திரைகள்-போதை பொருள் விற்பனை.பெண் உட்பட 3 பேர் கைது..

கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பெண் உள்பட 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 100 போதை மாத்திரைகள், 14 கிராம் போதை பொருள் (மெதப் டென்)இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர் . விசாரணையில் அவர்கள் கோவை செட்டிபாளையம் போத்தனூர் ரோட்டில் உள்ள சங்கம் நகரை சேர்ந்த ஷாஜகான் மனைவி மரியா ( வயது 29) உக்கடம் ஹவுசிங் யூனிட் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த யாஷிக் இலாகி ( வயது 25) செட்டிபாளையம் சங்கம் நகரை சேர்ந்த ஷாஜகான் (வயது 33) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களால்  யாசிக் இலாகி, ஷாஜகான் ஆகியோர் மீதும் கோவையில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. 3பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..