கோவையில் ஒரே நாளில் சாலை விபத்தில் 3 பேர் பலி..!

கோவை :நீலகிரி மாவட்டம் குன்னூர் பக்கம் உள்ள கொல கொம்பையை சேர்ந்தவர் விக்டர் மரியதாஸ், இவரது மகன் ராகுல் (வயது 26) இவர் நேற்று நெகமம் செட்டிக்காபாளையம்- சேரிபாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அங்குள்ள எம்மேகவுண்டன் பாளையம் அருகே சென்றபோது ரோட்டில் நடந்து வந்த ஒரு பெண் மீது பைக் மோதியது .இதில் ராகுல் கீழே விழுந்தார் ..அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது ரோட்டில் நடந்து சென்ற பெண் சகுந்தலாவும் (வயது 57) காயம் அடைந்தார்.சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராகுல் நேற்று இறந்தார் இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல மேட்டுப்பாளையம் அருகே உள்ள குரும்பனூர், இந்திரா நகரை சேர்ந்தவர் மாணிக்கம் .இவரது மகன் பரத் குமார் (வயது 22) பெயிண்டர். இவர் நேற்று கோவை -மேட்டுப்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். வடமதுரை பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு கார் இவரது பைக்மீது மோதியது. இதில் பரத்குமார் படுகாயமடைந்தார். சி கிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது தந்தை மாணிக்கம் துடியலூர் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகிறார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் சஹானி ( வயது 43) கூலி தொழிலாளி. இவர் நேற்று அவிநாசி- கோவை ரோட்டில் உள்ள சூலூர் பிரிவு அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது. இதில் ராஜேஷ் சகானி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் இறந்தார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.